பயிர் பாதுகாப்பு :: சக்கரைவள்ளி கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

கிழங்கு அழுகல் நோய்:
அறிகுறிகள்:

  • அழுகல் நோய் வேர் பகுதியில் காணலாம் மற்றும் இந்நோயின் பாதிப்பு வேறு பகுதிகளிலும் ஏற்படும்.
  • வறண்ட நிலையில் அழுகல் நோயைத் தடுக்கலாம். ஆனால், ஈரப்பத நிலையின் போது வள்ளி கிழங்குகளிலிருந்து நீர் கோத்துவிடும். சில நாட்களிலேயே வேர் பகுதி முழுமையாக அழுகிவிடும்
  • அதிகமான ஈரப்பத நிலையின் போது, கிழங்குகளில் கரும் பூஞ்சான்கள் அடர்த்தியாக காணப்படும். இவ்வகையான ரைசோபஸ் அழுகல் பூஞ்சான்களை மற்ற வகையான அழுகல் நோயிலிருந்து வேறுபடுத்தி காணலாம்.
  • நோய் தாக்கத்தினால், வேர் பகுதி நிறம் மாறாதலால் குறிப்பிட இயலாது. ஆனால் வேர் பகுதியில் ஏற்படும் நாற்றத்திற்கு பழ ஈக்கள் அப்பகுதிக்கு ஈர்க்கப்படுகின்றன.
  • கிழங்குகளை கிடங்குகளிலோ அல்லது போக்குவரத்தின் போது ஏற்படும் ஈரப்பத நிலை 75 – 85 சதவீதமாக இருப்பதனால் வேர் பகுதிகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன. சர்க்கரை வள்ளிக்கிழங்குகள் அதிக குளிர் மற்றும் வெப்ப நிலையிலும் எளிதில் கழுவுதல் பையிலிட்டு சந்தைக்கு செல்வதற்குள் எளிதில் அழுகல் நோய் தாக்கி அழித்துவிடும்

கட்டுப்பாடு:

  • அறுவடையின் போதுக் கிழங்குகளில் வெட்டுகள் ஏற்படாதவாறு தடுக்க வேண்டும். இதனால் அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • அறுவடைக்குப் பின் வேர் பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும்
  • 50-600 செ என்ற வெப்ப நிலையில் கிழங்குகளை கிடங்குகளில் வைக்கவும்.
  • வேறுடன் இருக்கும் கிழங்குகளை சேமிப்புக் கிடங்கில் வைக்காமல் இருப்பதன் மூலம் வெட்டுகளிலிருந்து தவிர்க்கலாம்.
  • அறுவடை செய்தபின் பூஞ்சான் கொல்லியினை உபயோகிக்க வேண்டும்
  • சர்க்கரைவள்ளி கிழங்குகளை அதிக நேரத்திற்கு சூரிய வெப்பதிலோ அல்லது குளிர் நிலையிலோ அனுமதிக்கக்கூடாது



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015